Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

அஸ்ஸாம் டேஸ்!

$
0
0

“சார், இங்கிட்டு அசாம் பொண்ணுங்கெ சூப்பர் இருப்பாங்கெ. ம்ம்ம்.. யார் கூடவேணா போவாங்கெ..” என்று அந்த ஆந்திர ட்ரைவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த போது என்னருகே இன்னும் இரு அசாமிஸ் நின்றுகொண்டிருந்தனர். ஒரு விநாடி ஆடிப்போய்விட்டேன். நல்ல வேளையாக அவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. அந்த டிரைவர் என்னிடம் சொல்ல வந்த விஷயம் உண்மையில் அஸ்ஸாம் குறித்த ஒரு சிறப்பான தகவல்தான். ஆனால், அவரது தமிழ்தான் இங்கே நம்மை நடுங்க வைத்துவிட்டது. 

அஸ்ஸாம் வரலாற்றுக் காலம் முதலாக, மிக சமீப காலம் வரையில், அரசியல் கூறுகள் காரணமாய் இடம்பெயர்ந்து வந்த பல்வேறு இன, மத மக்களாலும், இனக்கலப்பில் தோன்றிய மக்களாலும் ஆனது. மிகச் சமீபத்தில் 1971ல் வங்காளதேசம் பிறந்த போது கூட மிகப்பெரிய எண்ணிக்கையில் அங்கிருந்து மக்கள் அஸ்ஸாமுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களது முகங்களே இதை நமக்குத் தெரிவிக்கும். இந்தியர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள், ஆப்பிரிகர்கள் என தனித்துவமான முகவமைப்புகள் இருப்பது போல நமது நாட்டிலும் ஒவ்வொரு பகுதிக்குமென தனித்துவமான முகவமைப்புகள் உண்டு. ஆனால், அஸ்ஸாமில் இந்தியம், சைனம், பர்மியம் போன்ற பல வகையான முகவமைப்புகளைக் காணமுடிகிறது. அனைவரும் பிறப்பால், காலத்தால் அசாமியர்களே! இப்படியொரு பின்னணி இருப்பதால் அசாமியர்கள் தங்கள் பிள்ளைகளின் இனம், மதம் தாண்டிய காதல் திருமணத்திற்கு பெரிய மறுப்பேதும் சொல்வதில்லை. ஆகவே, அசாமிய பெண்கள் யாரையும் காதலிக்கவும், கைப்பிடிக்கவும் முடிகிறது. இதைத்தான் அந்த டிரைவர், “யார் கூட வேணா போவாங்கெ” என்று சொல்லியிருக்கிறார். 

ஆனால், அவர் சொன்ன முதல் வாக்கியம் சரிதான். “அசாம் பொண்ணுங்கெ சூப்பர் இருக்காங்கெ!”

*

கிளைமேட்தான் படுத்துகிறது. வந்த முதல் நான்கு நாட்கள் மூடுபனியில் ஊரே மூழ்கியிருந்தது. காலை மாலையில் தண்ணீர் உறையாத குறைதான். ஸ்வெட்டரும், அதற்கு மேலொரு ஜெர்கினும் அணிந்தாலும் உள்ளங்கை மறத்துப்போனது. ஆனால் அடுத்தொரு நாளில் காலை 7 மணிக்கே சூரியன் சுறுசுறுப்பாக எழுந்து விட, அடாடா பனிக்காலம் சட்டென இப்படி ஒரே நாளில் முடிந்துவிடுமா என்ற ஆச்சரியத்தோடு ஸ்வெட்டர் துணையில்லாமலே பணியிடத்துக்கு சென்றுவிட்டேன். ஆனால் மதியத்துக்கு மேல் ஆரம்பித்ததே ஒரு குளிர். 7 மணிக்கு அறைக்குத் திரும்பும் வரை பற்களால் தந்தியடித்துக்கொண்டிருந்தேன். அதன் பின், இந்த வம்பே வேண்டாமென ஜெர்கினைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன்.

*
டாஸ்மாக்.. ஸாரிபா பழக்கதோஷம், ஒயின் ஷாப்புகள்தான் ஆனாலும் அநியாயம்.. பொசுக்கு பொசுக்கென மூடிவிடுகிறார்கள். இன்றைக்கு ஏதோ தேர்தலாம். என்ன தேர்தலென்று தெரியவில்லை. ஒரு போஸ்டர், ஒரு குழாய் கட்டிய ஆட்டோ, ஒரு மீட்டிங் கண்ணில் படவில்லை. ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலாக இருந்தாலும் இவ்வளவு அமைதியாகவா நடக்கும்.? இதற்கெல்லாம் போய் பொசுக்கென 3 நாட்களுக்கு முன்னமேயே மூடிவிட்டார்கள். இதுவாவது பரவாயில்லை. 1ம் தேதி என்றாலும், மாதத்தின் கடைசி நாள் என்றாலும் மூடிவிடுவார்களாம். இதெல்லாம் ஒரு காரணமாய்யா உங்களுக்கு? சரக்குகள் விலை எல்லாம் பாண்டிச்சேரியை விட ரொம்ப சல்லிசு. மாலை நேரத்திலும் கடைகளில் கூட்டமே இல்லை. உருப்புடற ஊரா இருக்கும் போல!

எனக்காக இல்லை, உங்களுக்கு இதெல்லாம் சொல்லணுமே என்பதற்காக விசாரித்தேன்! ஹிஹி!

*


வடகிழக்கு மாநிலங்களுக்குள் நான் நுழைவது இதுதான் முதல் தடவை. ஏன் ராஜஸ்தான், சண்டிகர்னு வட இந்தியாவுக்குப் போகணும்.. பக்கத்துல இருக்கிற ஆந்திராவில் கூட எக்குத்தப்பாக ஏதாவது ஊரில் மாட்டிக்கொண்டால் நல்ல சாப்பாட்டுக்கு சிங்கியடிக்க வேண்டும். நாலு நாளில் நாக்குச் செத்துப்போய்விடும். ஆக, இங்கு வரும் போதே சாப்பாட்டை நினைத்து உள்ளூர நடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால், என்ன ஒரு ஆச்சரியம்! காலையில் பூரி, சப்பாத்தி, மதியம் சாதம், பருப்பு, மீன் குழம்பு, இரவு ரொட்டி என சுமுகமான சாப்பாடாக கிடைக்கிறது. நான் சொன்ன ஐட்டங்களின் பெயர்கள் மட்டும்தான் நம்மூரில் கிடைப்பவற்றுடன் ஒத்துப்போகின்றனவே தவிர சுவையில் அல்ல. ஆனால், இது கிடைப்பதே பிற இடங்களை ஒப்பிடுகையில் அரிது என்பதால் மகிழ்ச்சிதான்!

ஹோட்டல் மட்டுமின்றி சிறு டீக்கடைகள் வரை எங்கெங்கு காணினும் இனிப்பு வகைகள்தான். மூன்று நேரமும் இனிப்பு மட்டும்தான் உண்டு உயிர்வாழ வேண்டுமென்றாலும் ஒரு அசாமி சரியென்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பான் போலும். அதிலும், ரசகுல்லாவுக்கும், குலோப்ஜாமூனுக்கும் இடைப்பட்ட ஒரு சுவை, டெக்‌ஷரில் இருக்கும் இனிப்பு ஒன்று மட்டும்தான். அதுவே பல நிறங்களிலும், பல வடிவங்களிலும், பல வித டாப்பிங்ஸ்களோடும் கடைமுழுதும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. எந்நேரமும் யாராவது இனிப்புகளை தின்றபடியே இருக்கிறார்கள்.

ஒரே ஒரு உருண்டையைக்கூட என்னால் முழுதும் தின்னமுடியவில்லை, திகட்டிவிட்டது!

*
பாஞ்ச் ருபிஸ்க்கு பஷா! அப்புறம் என்ன தஸ் ருபிஸ்க்கு தஷா! முடிந்தது கதை! ஏற்கனவே சுட்டுப்போட்டாலும் இந்தி வராது. இதில் இந்த அழகு வேறு! இதில் ஒரு சுவாரசியம் என்னெவெனில், அருகிலிருக்கும் பூட்டான் தேசத்து ஐந்து ரூபாய் மட்டும் நம் கரன்சிக்கு இணையாக இங்கு எல்லா இடத்திலும் புழங்கிக்கொண்டிருக்கிறது. உண்மையில் பூட்டான் கரன்சி, நமதை விட குறைவான மதிப்புக் கொண்டிருந்தாலும், நமது ஐந்து ரூபாய் கரன்சிக்கு தட்டுப்பாடு காரணமோ என்னவோ மிக சகஜமாக எல்லாக் கடைகளிலும் புழக்கத்திலிருக்கிறது. ஆனால் ஐந்தைவிட அதிக மதிப்பிலான பூட்டான் கரன்சி கிடைப்பதில்லை.

*

வட இந்தியாவைப் போலவே, அரசு பஸ்களை கண்ணால் காண்பது கூட அரிதாகத்தான் இருக்கிறது. உள்ளூர் போக்குவரத்துக்கு ஷேர் ஆட்டோதான், நம்மூர் போலவே!

இன்று காலை ’வாட்டர், வாட்டர்’ என்று ஒரு ஷேர் ஆட்டோக்காரர் கூவிக்கொண்டிருந்தார். நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் அதுதான், ‘கவுஹாத்தி’ என கண்டறிந்தேன். அதைக் கேட்டபோது பழைய தென்காசி நாட்கள் நினைவுக்கு வந்தன. தென்காசி ஷேர் வேன்காரர்கள் (அப்போதெல்லாம் வேன்தானே!) சாம்பார்வடை, சாம்பார்வடை என கத்திக்கொண்டிருப்பார்கள். சாம்பவர்வடகரை எனும் ஊர்தான் அவர்கள் வாயில் சாம்பார்வடையாக மாறிவிட்டிருந்தது. இன்னொரு ஊரொன்றும் அருகிலிருந்தது. பம்புலி! பம்புலி மற்றும் பம்புளி என்பதாக அவர்கள் சொன்னாலும் நானும் கூட அந்த ஊரின் பெயர் பம்புளி என்பதாகவே நீண்ட நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தேன். அதன் சரியான பெயர் என்ன தெரியுமா?

“பைம்பொழில்!”

*

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!