Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

ரசிகன்: கணேஷ்-வசந்த்

$
0
0

நாம்விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்இன்று ஓட்டம்தான்வாழ்க்கைஎன்றாகிவிட்டது. அலுவல், டென்ஷன், டிராஃபிக், குடும்பம், இம்சைஎனஓய்வைப்பார்ப்பதேஅரிதாகஇருக்கிறது. பொழுதுபோக்குக்கான ஒதுக்கீட்டிலும்கொஞ்சம்சினிமா, கொஞ்சம்இண்டர்நெட்எனவேறுபணிகளுக்குநேரமில்லாநெருக்கடிதான். அப்படியும்அக்கடாவெனபடுக்கையில்விழும்நேரத்தில்கைக்கெட்டும்தூரத்தில்ஒருபுத்தகமும், அதற்கானசிறுவிளக்கும் வைத்திருக்கத்தான்செய்கிறோம். அங்கும் ஒரு சிக்கல்!படுக்கைநேரபுலம்பல்கள்இல்லாதஇரவுகள் கிடைக்கவேண்டுமே!அப்படியும்அமைந்துவிடும்ஒருநேரத்தில்நம்கண்களும்சொக்கிப்போகாமலிருக்கும்வரமும்கிடைத்திருந்தால்எடுக்கும்புத்தகம்நம்மைஎங்கேகொண்டுசெல்லவேண்டும்

ஒன்டூத்ரீ.. செட்கோ!

கொர்ர்ர்.. கிர்கொர்ர்ர்.. கிரக்கொர்ர்ர்!

மூன்றாவது பக்கத்திலேயே, திறமையான எழுத்தாளரெனின் மூன்றாவது பாராவிலேயே பரலோக சஞ்சாரம் செய்துவிடமுடிகிறது. அப்படியும் அந்த புத்தகத்தை முடித்தே தீருவது என்று கங்கணம் செய்துகொண்டீர்களானால் அரிதாய் சென்றடையும் அந்த அடுத்த வேளையில் முதலிலிருந்துதான் துவங்கவேண்டும். இப்போது அதே மூன்றாவது பாராவையோ, பக்கத்தையோ கடந்துவிட்டால் அது அந்த எழுத்தாளரின் சாதனைதான், ஒப்புக்கொள்ளலாம்!

எழுத்தாளரைச் சொல்வானேன்? நமது வேலைப்பளு, ஓட்டம், அயர்ச்சி, கூடவே முதிர்ச்சி.. (அவ்வ்.!) அப்படியாகிவிட்டது!

இதையும் மீறி படிக்க வருபவனை அடித்து நிமிர்த்த வேண்டுமென்றால் அது ஒரு சிலரால்தான் முடிகிறது.

சுஜாதா! எழுத்து!

இப்ப கிளம்பறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி எழுதிய கட்டுரையாகட்டும், 40 வருசத்துக்கு முன்னாடி எழுதிய கதையாகட்டும்.. பெட்டு கட்டலாம்! ஆரம்பிச்சா முடிக்காம வைக்கமுடியுமா? எல்லோரும் மூணு பாராவில் விளக்கிக்கொண்டிருந்த வேளையில், மூணு வார்த்தைகளில் சொல்லிவிட்டு, ‘உனக்கு புரியுதில்ல மச்சி, அப்பால என்ன? வா.. முதல்ல கதை என்னாச்சுனு பாப்போம்’னு வாசகனை கூட்டிக்கொண்டு சென்ற அந்த டெக்னிக்ஸ்தான் சுஜாதாவின் தனித்தன்மை. இல்லையில்லை அவரது சிறப்பு கதைத்தன்மைதான், அடர்த்திதான் என்று நீங்கள் ஆளாளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தீர்களானால் நானென்ன இல்லை என்றா சொல்லப்போகிறேன்.

கதைத் தலைப்புகள் ஞாபகமில்லா முன்காலத்தில் வாசித்தது கணேஷ்-வசந்த் துப்பறியும் கதைகளை. மீண்டும் ஒரு நாள் மொத்தமாக வாசிக்கவேண்டும் என திட்டமிருந்தது. இப்படித்தான் பல திட்டங்கள் பரணில் கிடக்கின்றன. ஆனால், இம்முறை எடுத்துவிட்டேனே.. உயிர்மை பதிப்பகத்தின் சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுப்பு கணேஷ்-வசந்த் கதைகளை!

தூக்கம் சொக்கும் 11 மணிக்கு படுக்கைக்கு வந்தாலும் கூட, ஒரு நாவலை படித்துவிட்டுத் தூங்கலாமே என்று எடுப்பதும், இன்னும் ஒன்றே ஒன்று என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு மேலும் படித்தது எல்லாம் எனது சின்ன வயதில் இரவுகளில் தூக்கம் தொலைத்து, 
அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு படித்த இரவுகளையெல்லாம் ஞாபகப்படுத்தியது. அது சுஜாதா!

சரி, அப்படியே உங்களுக்கும் ஞாபகப்படுத்தி வைப்போமே என்று இதை எழுதத்துவங்கினேன்… எழுதுறதுதான் எழுதுறோம், இதுவரை சுஜாதா எழுதிய நாவல்கள் எத்தனை? அதில் கணேஷ்-வசந்த் வரும் நாவல்கள் எத்தனை என்று ஒரு தகவல் தரலாம் என்று நினைத்து, எத்தனைத் தடவியும் இந்த இணையத்தில் அது கிடைக்கவில்லை. http://www.writersujatha.com/ எனும் தளத்தில் அவரது படைப்புகள் பலவற்றின் பிடிஎஃப் கோப்புகள் விற்பனைக்கு உள்ளன. அவரது புத்தகங்களை பதிப்பிக்கும், விற்பனை செய்யும் உரிமை பெற்றிருக்கிறது உயிர்மை பதிப்பகம் (http://www.uyirmmai.com/). இந்த தளங்களிலும் எந்த தகவல்களும் இல்லை. ஒரு தொகுப்பில் என்னென்ன நாவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவலையாவது தரக்கூடாதா ஐயா? http://balhanuman.wordpress.com/எனும் தளத்தில் சில பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன.


கணேஷ் வசந்தின் முக்கியமான நாவல்களாக பார்க்கப்படுகின்றவற்றுள் கொலையுதிர் காலம், சில்வியா, வசந்த்!வசந்த்!, யவனிகா, நிர்வாணநகரம் போன்றனவும் உள்ளன. உயிர்மை குறுநாவல்கள் மூன்றாம் தொகுப்பில் (கணேஷ்-வசந்த் நாவல்களின் முதல் தொகுப்பு) இந்நாவல்கள் இல்லை. இதில் இடம்பெற்றுள்ள நாவல்கள் மொத்தம் 13.

1.பாதி ராஜ்யம்
2.ஒரு விபத்தின் அனாடமி
3.மாயா
4.காயத்ரி
5.விதி
6.மேற்கே ஒரு குற்றம்
7.மேலும் ஒரு குற்றம்
8.உன்னைக்கண்ட நேரமெல்லாம்..
9.மீண்டும் ஒரு குற்றம்
10.அம்மன் பதக்கம்
11.மெரீனா
12.புகார்..புகார்..புகார்
13.ஐந்தாவது அத்தியாயம்

கணேஷ் வசந்த் பற்றிய சில சுவாரசியமான சில குறிப்புகள்:

*1968ல் சுஜாதா எழுதிய ’நைலான் கயிறு’ எனும் கதையில் கணேஷ் ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார். அப்போதோ, பின்பு ’பாதி ராஜ்யம்’ எழுதும்போதோ கூட கணேஷ் துப்பறியும் நாவல்களை தொடர்ந்து எழுதும் எண்ணம் சுஜாதாவுக்கு இருந்திருக்குமா தெரியவில்லை.

*பாதி ராஜ்யம் கதையில் நீரஜா எனும் கிளையண்ட் வருகிறார். அந்தக்கதையின் முடிவில் அவரைக் கிட்டத்தட்ட கணேஷ் காதலிக்கிறார். கல்யாணமும் செய்துகொள்கிறார் எனவும் நாம் ஊகிக்கலாம். ஏனெனில் அடுத்து வரும் ‘விபத்தின் அனாடமி’ நாவலில் நீரஜா வருகிறார். அதில் அவர் கணேஷின் மனைவி என்றோ, அசிஸ்டெண்ட் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. பின்பு வந்த கதைகளில் நீரஜா மெல்ல மெல்ல மறைந்து விட்டதால் அதுவும் குறிப்பாக வசந்த் வந்தபின்பு கணேஷ், வசந்த் காரெக்டர்கள் நிலைபெற்றுவிடுகின்றனர். ஆக, நீரஜா முன்பும் அசிஸ்டெண்ட் என்றளவிலேயே இருந்தார் என மாற்றப்பட்டுவிட்டார். அதன்பின்பு காதல், கல்யாணம் என்ற சிக்கல்களில் எப்போதும் இந்த இருவரும் விழவில்லை. பார்க்கும் இளம்பெண்களையெல்லாம் காதலிக்கும் வசந்தின் லவர் பாய் அட்டகாசமே போதுமென்றாகிவிட்டது.

*வசந்த் 1973ல் எழுதப்பட்ட ‘ப்ரியா’ எனும் நாவலில்தான் அறிமுகமாகிறான். அதுவரை பம்பாய், டெல்லி என அலைபாய்ந்து கொண்டிருந்த கணேஷ் சென்னை தம்புச்செட்டித்தெருவில் நிரந்தரமாக குடிபெயர்கிறார்.

*எந்த நேரமும் விளையாட்டு, கேலி, ஏ ஜோக்ஸ், உற்சாகம் என இருக்கும் வசந்த் ஒரு டேட்டாபேங்க் ஆகவும், இக்கட்டான தருணங்களில் கணேஷுக்கு பாயிண்டுகளை எடுத்துத்தருபவராகவும் விளங்குகிறார். சுஜாதாவின் நீண்ட எழுத்துப்பயணத்தில் சில ஜோக்ஸ் ரிப்பீட்டும் ஆகியிருக்கிறது. சட்டப்புத்தகத்தை நீண்டநேரம் நோண்டிவிட்டு, ’செக்‌ஷன் 316 டிவிஷன் 4 அண்டர் கண்டிஷன் Bயில் இந்தக் கேஸ் வருமாடா வசந்த்?’ என கணேஷ் கேட்கும் போது, கூலாக டிவி பார்த்தபடி, ’அது கண்டிஷன் C பாஸ்’ என பதில் சொல்கிறான் வசந்த்.
‘எப்படிடா இவ்ளோ ஞாபகசக்தி?’
‘நீங்க ஆபீஸ் வரதுக்கு முன்னாடி அதத்தானே 3 மணி நேரமா முக்கி முக்கி பாத்துகிட்டிருந்தேன்’

*இப்படி நெருக்கமாக இருக்கும் இருவருக்கும் இடையே ஒரு நாவலில் சண்டையும் வருகிறது. ‘மேலும் ஒரு குற்றத்’தில் கணேஷ் மிகக்கடுமையாக பேசிவிட மனம் நோகும் வசந்த் அதனால் கஞ்சா அடிப்பதாகவும் கூட வருகிறது.

*காயத்ரி, ப்ரியா போன்ற சில கதைகள் படமாகியிருக்கின்றன. (காயத்ரியில் ரஜினி வில்லனாகவும், ப்ரியாவில் ரஜினி கணேஷாகவும் நடித்திருக்கிறார்). இரண்டும் சுஜாதாவுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்திருக்கக்கூடும். ‘உன்னைக்கண்ட நேரமெல்லாம்’ நாவலில் ப்ரியா படத்தில் அவர்களை இப்படிக் காண்பித்தமைக்காக ’இந்த ரைட்டர் சுஜாதா மேல் கேஸ் போடணும் பாஸ்! என்ன நினைச்சிகிட்டிருக்கான் அந்தாளு?’ என்று எரிச்சல்படுகிறான் வசந்த்!

*மீண்டும் ஒரு குற்றம் கதையில் கலர் டிவி ஒரு பெரிய டெக்னிகல் வளர்ச்சி என்பதாக பார்க்கப்படுகிறது. வசந்த் அதில் ஏஷியாட் விளையாட்டுப் போட்டிகள் பார்க்கிறான். ஐந்தாவது அத்தியாயம் கதையில்தான் செல்போன், கம்ப்யூட்டரே வருகிறது. அதுவரை இவை எதுவுமில்லை. ஒரு கதையில் கேஸ் விஷயமாய் பிளைட் பிடித்து பாரிஸ், ம்யூனிச் நகரங்களுக்குச் செல்வதையும், அதற்கான செலவுத்தொகையையும் மிகப்பிரமாதமான விஷயமாய் பேசுகிறார்கள் இருவரும்! இத்தொகுப்பிலிருப்பவை பெரும்பாலும் 70, 80களில் எழுதப்பட்ட கதைகளாக இருக்கலாம். காலம் பற்றிய குறிப்பு புத்தகத்தில் இல்லை.

*இருவரின் குடும்பம் பற்றிய தகவல்கள் இல்லை. வசந்தின் இனிஷியல் ஆர்! கணேஷின் இனிஷியல் ஜே! தலா ஒரு கதையில் மிகத்தற்செயலாக இவை வருகின்றன.


சுஜாதா மட்டுமல்ல, கணேஷ்-வசந்தும் என்றும் நம் நினைவிலிருந்து நீங்காதவர்கள்தாம். மீண்டும் அவர்களை தரிசிக்கும் அட்டகாசமான அனுபவத்தைத் தந்தது ’உயிர்மை’யின் இந்த மூன்றாம் தொகுதி. சென்னை திரும்பியதும் நான்காம் தொகுதியையும் கையில் எடுக்கவேண்டும்.
.

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!