Quantcast
Viewing all articles
Browse latest Browse all 108

రెబల్ - ரெபலு (தெலுகு)


’ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் ஒரு மிகச்சிறந்த நடிகர். ஆக்‌ஷன், டான்ஸ், காமெடி என்று கமர்ஷியல் படங்களில் கலக்குவது மட்டுமில்லாமல், சிறந்த நடிப்புக்கும் பெயர் போனவர். அவர் படமென்றால் முதல் நாளே பார்த்துவிடுவேன். தொடர்ந்த இரண்டு மெகா ஹிட்டுகளுக்குப் பின் இந்தபடத்தில், ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்ற வகையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்றால் அது மிகையாகாது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

ஹிஹி.. மேல சொன்னது பூரா டுபாகூர். பிரபாஸ்னா யார்னே எனக்குத் தெரியாது. இங்க வைசாக்ல ஒரு வேலை விஷயமா வந்து சிக்கிக்கொண்டு ஒரு வாரம் ஆகிறது. வேலை முடிந்து சென்னை கிளம்ப இன்னும் ஒரு வாரம் ஆகும். நேத்திக்கு சனிக்கிழமை மாலை, தங்கியிருக்கும் இடத்தில் பவர்கட் வேற. (இங்கயும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம், மூணு ஷிப்ட்ல பவர்கட் ஆவுது). பக்கத்துல ஒரு தியேட்டர் இருக்கிறது. அங்கே ரெண்டு நாளா, பேனர்ஸ், பட்டாசு, மேளதாளம்னு ஒரே கூத்து. விஜய் மாதிரி ஏதோ ஒரு ஸ்டார் படம் ரிலீஸாகியிருக்குனு எளிதாக கெஸ் பண்ணிக்கொண்டேன். பொழுது போவாம, என்ன பண்றதுனு தெரியாமத்தான் அந்த தியேட்டர்க்கு படத்துக்குப் போகவேண்டிவந்தது. (போஸ்டரில் தமன்னா தந்திருந்த ஒரு பயங்கர குத்து டான்ஸ் போஸைப் பார்த்துதான் நான் உள்ளே போனேன் என்று தயவுசெய்து யாரும் நினைக்கவேண்டாம்). மத்தபடி தமிழ் தவிர வேற இந்திய மொழிப் படங்களுக்கும், நமக்கும் எந்த பந்தமும் கிடையாது. அதோட நமக்கு தெலுகும் ராது!

சரி, இனி படத்தைப் பற்றி பாப்போம். நம்மாளுகளுக்கு தமிழில் கதை சொல்வதால் ஒண்ணும் சஸ்பென்ஸ் போய்விடாது என்பதால் முதலில் கதை.


ஒரு வீராதி வீரர், சூராதி சூரரான அப்பா. (சண்டைக்கோழி, அரசு என ஏராளமான படங்களில் பார்த்த அதே ப்ளாஷ்பேக் பில்டப் அப்பா. இவர் ஒரு குத்துவிட்டால் ஸ்டண்ட்மேன் ஃபுட்பால் போல பறந்து, பக்கத்து டிரான்ஸ்பார்மரில் போய் மோதி வெடிப்பார்). அவருக்கு ஒரு பையர் (ஹீரோ பிரபாஸ். அப்படியானால் இவர் குத்துவிட்டால் என்ன ஆகும்னு நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்)- வெளியூரில் எங்கேயோ படித்துக்கொண்டிருக்கிறார், நல்லவர் போல நடிக்கும் ஒரு தம்பி (மெயின் வில்லர்), பையர் போன்ற நேர்மையான ஒரு அடியாள், மனைவி, தோட்டம் துரவு, ஆள் அம்பு, ஒரு 200 அடியாட்கள் (எல்லோர் கையிலும் ஷாட் கன்ஸ்), 500 கார்கள்.

இவர் ஆதரவில் ஜெயித்த ஒரு எம்மெல்லே ஒருவர், அடுத்த தேர்தல்லயும் இவர் ஆதரவை கேட்டு இவர் வீட்டுக்கு வந்து காலில் விழுந்து கெஞ்சுகிறார். அவர் கடந்த 5 வருசமாக ஒழுங்கா ஆட்சி பண்ணவில்லை என்பதால், இவர் அவர் மூஞ்சியிலேயே நாலு குத்துவிட்டு அனுப்பிவிடுகிறார். இவரை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியாது என்பதால் எம்மெல்லே, சதித்திட்டம் தீட்டி அவரது தம்பியையே ஏற்பாடு செய்து, கூடவே ராபர்ட் (இவர் ஒரு மிகப்ப்ப்பெரிய அடியாள், மார்ஷியல் ஆர்ட் பிஸ்தா, இவருக்கென்று ஒரு ஐம்பது ஸ்பெஷல் அடியாட்களும் இருக்கிறார்கள். இவருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை எனினும் இவர் பெயர்தான் படம் பூரா அடிபடுகிறது) என்பவரையும் வரவைத்து சூராதி சூர அப்பாவையும், குடும்பத்தையும் கொலை செய்துவிடுகிறார். அப்பா, அம்மா, காதலி என அனைவரும் ரத்தவெள்ளத்தில் கிடக்க, வந்து பார்க்கும் ஹீரோ வெறியாகி பழிவாங்க கிளம்புகிறார். ஆனால் பாருங்கள் பாவம், வில்லர் சித்தப்பாவும், ராபர்டும் அதற்குள்ளாகவே எங்கேயோ கண்காணாத இடத்துக்கு ஓடிவிடுகிறார்கள். ஆனால் அந்த முட்டாள் எம்மெல்லே என்ன செய்கிறார் என்பது ட்விஸ்ட். அவரும் கும்பலோடேயே ஓடிப்போகாமல் ஹீரோவுக்கு முன்னால் நூறடி தூரத்தில் வந்து நின்றுகொண்டு, “ஹிஹி, பாத்தியா உங்கப்பாவை கொலைபண்ணிட்டேன். ஆனா அவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்கனு சொல்லமாட்டேன்” என்று வலிப்பு காட்டுகிறார். அவர் இவரை பிடிக்க பக்கத்தில் வருவதற்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்துகொள்கிறார். (நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்ட பின்பும் ஒரு டயலாக் பேசுகிறார்).

மேலே சொன்ன அத்தனையும் இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது காதலி தமன்னாவுக்கு, ஹீரோ உண்மையை உரைக்கும் போது கிளைமாக்ஸுக்கு முன்னர் வரை சொல்லப்படுவது. முதல் பகுதி படம் பூராவும் ‘ராபர்டை’த் தேடி ஹீரோ ஹைதராபாத், வைசாக், பாங்காக் எல்லா இடமும் அலைகிறார். அவர் யாரென்ற உண்மையும் நமக்குத் தெரியாது. எதற்குத் தேடுகிறார் என்றும் நமக்குத் தெரியாது. அந்த தேடும் வைபவத்தில்தான் ஜாலியான பாட்டுகள், தமன்னாவுடன் காதல். (தமன்னாவின் அப்பா ஒரு பெரிய டான். கடைசியில் அவர், ராபர்டுக்கே அடியாள்தான் என்றும் தெரிகிறது.)

இனி கிளைமாக்ஸ். என்ன முக்கியும் இவரால் வில்லன் கும்பலை கண்டுபிடிக்கமுடியவில்லை. கிளைமாக்ஸ் வந்துவிட்டதால் அவர்கள் இரண்டு பேருமே இவர் முன்னால் பிரசன்னமாகி, “ஹிஹி.. எங்களதானே தேடிகிட்டிருக்கே..”னு தமன்னாவை பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். அவர்களோ ஷாட் கன் சகிதம் 100 பேர். இவரோ தனியர். பாவம், இவரது ஸ்டன் கன் அடியாட்கள், 500 கார்கள், அதன் ட்ரைவர்கள் எல்லோரும் லீவில் போய்விட்டார்கள் போலிருக்கிறது. அப்போதான் இன்னொரு ட்விஸ்ட். ”5 நிமிசம் உங்களுக்கு டைம் தர்றேன். எத்தனை பேர் வந்துவேண்டுமானாலும் என்னை அடியுங்கள், நான் பதிலுக்கு அடிக்கமாட்டேன். நான் டயர்டாயி தோத்துட்டா நீங்க ஜெயிச்சிருவீங்க.. இல்லாம நான் டயர்டாவலைனா திரும்பவும் சண்டை போடுவோம். யாரு ஜெயிக்கானு பாப்போம்”னு ஒரு வித்தியாசமான சவால் விடுகிறார். எனக்கு தெலுகு தெரியாததால் ஏன் இப்படி ஒரு வித்தியாசமான சவால் விடுகிறார்னு எனக்கு சரியா புரியலை.

அதேதான். எல்லோரும் சேர்ந்து இவரை மொத்துமொத்துனு மொத்துறாங்க. ரத்தம் கக்கக் கக்க மயங்கிவிழுறார். 5 நிமிசம் முடியுது. தமன்னா சியர் அப் பண்ணவும், அப்பாவை சுட்டதையெல்லாம் பிளாஷ்கட்ல நினைச்சுப்பாத்து திரும்பவும் எழுந்து நிற்கிறார். தட்ஸ் ஆல். டம்மு, டும்மு, சடார், மடேல், குமுக், மளுக், கிறிக், கிளிங், சதக், மடார்.. ஒத்த ஒத்த சவுண்டுதான். ஒரு சவுண்டுக்கு ஒரு ஆள் என்ற கணக்கில் மடார், மடார்னு சரிந்து விழுகிறார்கள். அடாடா, நாம் மெயின் வில்லர் நினைச்ச மார்ஷியல் ஆர்ட் ‘ராபர்ட்’டும் மூஞ்சியில் விழுந்த ஒரே ‘டொமுக்’கில் மல்லாந்து விழுந்து பிராணனை விட்டுவிடுகிறார். சண்டை சீக்கிரம் முடிந்துவிடுவதால் சித்தப்பாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக இன்னும் நாலு குமுக்குகளை கொடுத்து, இடது பக்கமும், வலது பக்கமும் நாலு தடவை பறக்கவைத்து படத்தை முடித்து வைக்கிறார் ஹீரோ.

எ ஃபிலிம் பை ராகவா லாரன்ஸ். 

அடாடா, டான்ஸ் மூவ்மெண்டோடு பைட்டர்ஸ் பறக்கும் போதே மைல்டா சந்தேகப்பட்டேன். (உள்ள போறதுக்குள்ள டைட்டில் முடிஞ்சிடுச்சு. சரியான கூட்டம்) கன்பர்ம் பண்ணாம விட்டுட்டேன். இந்தக் கதையில் காமெடி, பாசம், காதல், அனாதை-ஊனமுற்ற குழந்தைகளின் பாச செண்டிமெண்ட் என சரிவிகிதமாய் கலந்து பின்னியிருக்கிறார் லாரன்ஸ். பிரம்மானந்தமும், இன்னும் இரண்டு சீனியர் காமெடியன்ஸும் (எம்.எஸ்.நாராயணா, அலி) ஒரு ஒரு சீன் வந்தாலும் விலா நோக சிரிக்கவைகிறார்கள். தெலுங்கு தெரியாத நானே அப்படிச் சிரித்தேன். காமெடிக்கும், சண்டைக்கும் தியேட்டரே உற்சாகமாக அலறுகிறது. எனக்கே கன்ஃபர்மா தெரியுது, இது தெலுங்கில் சரி ஹிட்டடிக்கும்னு. ஒண்ணு மட்டும் நிச்சயம். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு தெலுங்கு சினிமாவும், தமிழ் சினிமாவும் ஒரு காலமும் உருப்படப்போறதில்லை. ஜாண் ஏறினால் முழம் சறுக்கத்தான் செய்யும். லாரன்ஸுகளுக்கும், ராஜேஷ்களுக்கும் முன்னால் பாலாஜிசக்திவேல்களும், ராதாமோகன்களும் நிற்பது சிரமம்தான்.

இயல்பான படங்கள்லாம் நமக்கு அத்தி மலர்கள்தாம்!! 
.


Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!