என் அன்புக்குரிய மாமா, திரு. பாப்பாக்குடி இரா.செல்வமணி அவர்கள் எழுதிய பின்வரும் இரண்டு நூல்கள் நாளை, 30.12.16 அன்று மாலை 3.30 மணியளவில் பாளையங்கோட்டை, வ.உ.சி மைதானம் அருகே அமைந்துள்ள அய்யம்பெருமாள் அரங்கில் வைத்து நடைபெற இருக்கும் சிறிய விழாவில் வெளியிடப்படவிருக்கின்றன.
![]()
![]()
எளிமையாகச் சொல்வதானால், என் வாசிப்பு துளிர்த்ததே என் மாமா தந்த வரத்தினால்தான். இன்று அவரது நூலுக்கே பிழைத்திருத்தம் செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. வாசிப்பு, தமிழார்வம், நகைச்சுவையுணர்வு என அவரைப் பற்றிப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பகிர இது பொருத்தமான வேளைதான். இருப்பினும், சில வாரங்களாகத் தொடரும் பணிச்சுமை அழுத்துவதால், பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்.
விழாவில், குளித்தலை, திரு. கடவூர் மணிமாறன் அவர்களின் விடியல் பதிப்பக வெளியீடான, ‘வான்வெளியில் என் நட்சத்திரங்கள்’ எனும் கவிதை நூலை திரு. கடவூர் மணிமாறன் அவர்களும், சென்னை, திரு. வேடியப்பன் அவர்களின் ‘படி வெளியீடு’ பதிப்பான, ‘அகம் சொல்லும் முகம்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. க. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வெளியிட இருக்கிறார்கள். கவிஞர் குமார. சுப்பிரமணியம் (ஆசிரியர் குழு, மீண்டும் கவிக்கொண்டல் இலக்கிய இதழ்) அவர்கள் நிகழ்வின் தலைமையேற்று சிறப்புச் செய்யவிருக்கிறார்.
மூத்த கவிஞர்கள், தமிழார்வலர்கள், பேராசிரியர்கள் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். திருநெல்வேலி மற்றும் அருகிருக்கும் எனது வலைப்பூ, முகநூல் நண்பர்களுக்கு இப்பதிவின் மூலமாக அழைப்பு விடுக்கிறேன். தங்கள் வரவு நிகழ்வை மேலும் சிறப்புடையதாக்கும். நிகழ்ச்சி வரவேற்புக் குழுவில் ஒருவராக நானும் காத்திருப்பேன். அனைவருக்கும் என் அன்பு.

எளிமையாகச் சொல்வதானால், என் வாசிப்பு துளிர்த்ததே என் மாமா தந்த வரத்தினால்தான். இன்று அவரது நூலுக்கே பிழைத்திருத்தம் செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. வாசிப்பு, தமிழார்வம், நகைச்சுவையுணர்வு என அவரைப் பற்றிப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பகிர இது பொருத்தமான வேளைதான். இருப்பினும், சில வாரங்களாகத் தொடரும் பணிச்சுமை அழுத்துவதால், பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்.
விழாவில், குளித்தலை, திரு. கடவூர் மணிமாறன் அவர்களின் விடியல் பதிப்பக வெளியீடான, ‘வான்வெளியில் என் நட்சத்திரங்கள்’ எனும் கவிதை நூலை திரு. கடவூர் மணிமாறன் அவர்களும், சென்னை, திரு. வேடியப்பன் அவர்களின் ‘படி வெளியீடு’ பதிப்பான, ‘அகம் சொல்லும் முகம்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. க. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வெளியிட இருக்கிறார்கள். கவிஞர் குமார. சுப்பிரமணியம் (ஆசிரியர் குழு, மீண்டும் கவிக்கொண்டல் இலக்கிய இதழ்) அவர்கள் நிகழ்வின் தலைமையேற்று சிறப்புச் செய்யவிருக்கிறார்.
மூத்த கவிஞர்கள், தமிழார்வலர்கள், பேராசிரியர்கள் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். திருநெல்வேலி மற்றும் அருகிருக்கும் எனது வலைப்பூ, முகநூல் நண்பர்களுக்கு இப்பதிவின் மூலமாக அழைப்பு விடுக்கிறேன். தங்கள் வரவு நிகழ்வை மேலும் சிறப்புடையதாக்கும். நிகழ்ச்சி வரவேற்புக் குழுவில் ஒருவராக நானும் காத்திருப்பேன். அனைவருக்கும் என் அன்பு.