*
விஸ்வரூபம் மீதான தடை அவசியமற்ற ஒன்று. கண்டிக்கப்படவேண்டியது. -அமித் கன்னா
விஸ்வரூபம் மீதான தடை அவசியமற்ற ஒன்று. கண்டிக்கப்படவேண்டியது. -அமித் கன்னா
*
தணிக்கைக் குழுவின் சான்று பெற்ற ஒரு படத்தை மக்கள் பார்க்கவிடாமல் செய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும். -மகேஷ் பட்
*
படத்தைப் பார்த்தபின்பு அவசியமெனில் அதை நிராகரிக்கும் முடிவை மக்கள்தான் எடுக்கவேண்டும், தனிப்பட்ட அமைப்புகள் அல்ல! -சேகர் கபூர்
*
சான்று பெற்ற ஒரு படத்தை தடைசெய்ததன் மூலம், தமிழக அரசு, CBFCயின் அவசியத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. -மனோஜ் பாஜ்பாய்
*
ஜனநாயகத்தின் மீதான வன்முறை இது. -தனுஜ் கர்க்
*
தமிழக அரசின் செயல்கண்டு அதிர்ந்துபோயிருக்கிறேன். -மதுர் பண்டர்கர்
*
தணிக்கைச்சான்று பெற்ற ஒரு படத்தைப் பார்க்காமலேயே எப்படி அது ஒரு இனத்துக்கு எதிரானது என்ற முடிவுக்கு வரமுடிகிறது சிலரால்? அவர்களுக்கு ஒரு மாநில அரசும் எப்படித் துணைபோகமுடியும்? -அனுராக்
*
தமிழ் சினிமாவை இருளுக்குள் தள்ளியிருக்கிறது தமிழக அரசு. -சித்தார்த்
*
CBFCஐ தமிழக அரசு நிராகரிக்கிறதா? அல்லது சட்டம் ஒழுங்கைக் கைக்கொள்ளும் திராணியில்லையா? -அனுபவ் ஸின்ஹா
*
இதை ஏற்கமுடியாது. இது ஒரு கலாச்சார வன்முறை. -பிரகாஷ் ராஜ்
*
அப்பட்டமான படைப்புச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இது. என்ன மாதிரியான சுதந்திரம் நமக்கு இருக்கிறது? -மாதவன்
*****
@kanapraba: அரசின் தணிக்கைச் சான்றிதழே அங்கீகரித்த பின்னர் எதற்கு நீதிமன்றத் தடை, இஸ்லாமிய அமைப்புக்களின் வேண்டுகோளுக்கிணங்க 2 வார தடை என்று அரசாணை? அப்படியென்றால் வெத்துவேட்டு தணிக்கைக்குழுவையே கலைத்துவிடலாமே?
@writernaayon: விஸ்வரூபம், தீவிர வாதநோயால் முடங்கிக்கிடக்கிறது.
@iVenkadesh: மனைவி:என்னங்க படம் டைடில் போட்ட உடனே முடிஞ்சிடிச்சி. கணவன்:அது விஸ்வரூபம் எடிட் பண்ணின பிரிண்டாம். மனைவி:???
@NaughtyGann: நாத்திகனாய் இருப்பது எவ்வளவு கடினம் என்று விஸ்வரூபம் விஷயத்திலிருந்து புரிகிறதா?!
@Kaniyen: போற போக்கைப்பார்த்தா கமலே விஸ்வரூபம் படத்தை திருட்டு விசிடியில வெளியிட்டுடுவார் போல..
@cablesankar: நான் ஆந்திரா போயாவது விஸ்வருபம் படம் பார்த்தே தீருவேன்.
@Venkatgangulian: விஸ்வருபம் படத்தை தடை செய்ததை விட சில முஸ்லிம்கலின் வீர வெட்டி வசனம்களை தான் தாங்க முடியவில்லை.
@vnashankar: இன்னும் எவன் எவனெல்லாம் எதிர்ப்பு காட்டனுமோ இப்பயே க்யூல வந்து நில்லு... சும்மா வாரத்துக்கு ஒவ்வொருத்தனா வந்துகிட்டு...
@amalan_a: முதல்ல ஜாதி சங்கத்தையும், மத சங்கத்தையும் Ban பண்ணனும், இம்சப்பா..
@iDookudu: படத்த பாக்காம எந்த கருத்தும் சொல்ல முடியாது! முதல்ல படத்த வெளிவிடுங்கப்பா.
@tubelightbala: நல்லா பாருங்கய்யா.. கலைஞரு விஸ்வரூபம் நல்லாருக்குனு எதுவும் சொல்லிருக்காரானு.. தமிழக அரசு தடைனா டவுட்டா இருக்கு.
@meyrin1217: முஸ்லிம் இயக்கத்தலைவர்கள் விஸ்வரூபம் படம் பார்த்தார்களாம். அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் காட்சியா?
@itisprashanth: லாஸ் ஏஞ்சல்ஸ்-ல இருந்து திரும்பி வரவேண்டாம். அங்கேயே செட்டிலாகிடுங்க கமல் சார். இவனுகளுக்கு அலெக்ஸ்பாண்டியன் தான் லாயக்கு.
@iqbalselvan_ : என்னது விஸ்வரூபத்தை தடை பண்ணிட்டாங்களா ?! அப்பவே சொன்னேன் ஆப்கானிஸ்தான் வேண்டாம், அமஞ்சிகரை போதும்ன்னு !
@iVenpu: கொய்யால.. இனிமே எல்லா பயலுவங்களும் விக்ரமன் மாதிரி வில்லனே இல்லாம லலலா லலல லலலான்னு படம் எடுங்கய்யா. :)
@udanpirappe: நம்மூர் அமைப்புகளுக்கு காவிரி பிரச்சினைக்கும்… கரன்ட் பிரச்சினைக்கும் போராடத் தெரியாது… #சினிமா மட்டுமே குறி.
@rajarajan1975: முன்னாடி நம்ம கேப்டன் விஜயகாந்த் அழிச்ச தீவிரவாதிகள எல்லாம் புத்த மதத்தை சேர்ந்தவங்களா?
@alaipesi: எங்களை மோசமாக சித்தரிக்கிறார்கள்ன்னு மாமியார்கள் சங்கம் சீரியல்களுக்கு எதிராக ஏன் கண்டனம் தெரிவிக்கக்கூடாது...?
@iqbalselvan_: திரைப்படங்களை எதிர்ப்பதன் மூலம் மதவாதிகள் விளம்பரம் தேடுவதோடு, ஒட்டு மொத்த சமூகத்தை பிரதிப்பலிப்பதாக பம்மாத்துகின்றார்கள் ..
*******
விஸ்வரூபம் படம் குறித்து Twitter தளத்தில் பகிரப்பட்டிருந்த சில எண்ணங்களே மேலே தொகுக்கப்பட்டவை.
ஆந்திரா சென்று படம் பார்த்துவந்த கேபிள்சங்கரின் விமர்சனம் இது.
வேலை விஷயமாக சில நாட்களாக ராய்பூரிலிருக்கும் நான் முன்னதாக ஹிந்தி வெர்ஷன் பார்த்துவிடலாம் என்று மகிழ்ந்திருந்தேன். பேட் லக்! பிப்.1ல்தான் ஹிந்தி வெர்ஷன் ரிலீஸ் என்பது ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட விஷயமாம்.
படம் உண்மையில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் பின்னணி பேசப்படுவதன் மூலம் இஸ்லாத்துக்கு ஆதரவானதாகவும், பதிலாக அமெரிக்க ராணுவத்தை விமர்சிப்பதாகவும்தான் அமைந்திருக்கிறது. நியாயப்படி பார்த்தா அமெரிக்காதான் இந்தப்படத்தைத் தடைசெய்யவேண்டும் என்பதாக ஆந்திர, மலையாள தேசங்களுக்குள் ஊடுருவி விஸ்வரூபம் பார்த்துவந்த சில நண்பர்கள் கருத்துகள் பகிர்ந்தனர். அரசியல் பின்னணிகளுக்கு முன் தனிமனிதன் நசுக்கப்படுவதெல்லாம் மிகச்சாதாரண விஷயம்தான் இல்லையா? கமலுக்காவது ஏதோ நாலு பேர் சப்போர்ட் பண்ணவாவது செய்கிறோம்.
நாஞ்சில்நாடனின் ‘காவலன் காவான் எனின்’ கட்டுரைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தண்ணீருக்கு மேலே தெரியும் பனிக்கட்டியின் அளவை ஒத்தவைதான் இந்நிகழ்வுகள் எல்லாம், பெரிதல்ல. ஆனால் தண்ணீருக்கு கீழே பனிமலை காத்திருக்கிறதா இந்த சமூக அமைப்பை மூழ்கடிக்க? பெரும் அச்சமூட்டுவதாக இருக்கிறது இது போன்ற எண்ணங்கள்.
*