இந்த புதிய கதைக்களம் ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கச்சிதமான ஒரு கதை.
ஒரு பாரம்பரியமான மலைக்கிராமம். அவர்களின் அறுவடைக் காலத்தை சிதைத்து, உயிர்களை கொல்லும் கொம்பன் எனும் ஒற்றை மலை யானை. அரசு உதவாத நிலையில் அந்த பருவத்தை தனியார் கும்கி யானையின் உதவியுடன் அறுவடை செய்ய திட்டமிடுகிறார்கள் அவர்கள். வரவேண்டிய கும்கியின் வரவு தாமதப்பட தற்காலிகமாக கும்கி யானை என்ற பெயரில் கோயில் விழாக்களில் பங்கேற்கும், சாதாரண ஒரு எருமையின் கனைப்புக்கும் கூட பயப்படும் ஒரு சாதுவான யானை கொண்டுவரப்படுகிறது. அதன் பாகன் பொம்மன் நட்புக்காக இப்படி தன் யானை மாணிக்கத்தோடு அங்கு வருகிறான். உண்மையான கும்கி வரும் சூழல் வந்தபின்பும் தானே அங்கு இருப்பேன் என்று அடம்பிடித்து தொடர்கிறான். காரணம் அங்கு அவனுக்கு ஏற்பட்ட காதல்.
கட்டுப்பாடுகளை மீறி அவன் காதல் வென்றதா, கொம்பனை மாணிக்கம் விரட்டியதா என்பதையெல்லாம் நீங்கள் வெள்ளித்திரையிலே கண்டுகொள்ளவும். இப்பல்லாம் முழுசா கதை சொன்னா 'ஸ்பாய்லர்'னு சொல்லி அடிக்க வர்றாங்கப்பா..
இவ்வளவு விறுவிறுப்பான, புதிய கதைக்கு எவ்வளவு அழகான லொகேஷன், அற்புதமான ஒளிப்பதிவு, விஷுவல்ஸ் இன்ன பிற அட்டகாசமான விஷயங்கள் இருந்தும் 'படம் பிரமாதமா?' என்று கேட்டால் லேசாக நெளியத்தான் வேண்டியிருக்கிறது. பல காட்சிகள் மெதுவாக ஊர்வது போல உணர்வு. காரணம் மிக எளிதானது. மாணிக்கம்- பொம்மனுக்கிடையேயான உறவு, பொம்மன்- அவன் காதலிக்கிடையேயான உறவு, கிராமத்தின் பின்னணி போன்ற முக்கியமான விஷயங்களில் அழுத்தமே இல்லை.
போதும் போதாமைக்கு பொறுமையைச் சோதிக்கும் தம்பி ராமையா, கொம்பனின் பி.ஆர்.ஓ போலவே அவ்வப்போது வந்து செயல்படும் காட்டிலாகா அதிகாரி, மைனா போலவே ஒரு அழகான கமர்ஷியல் கதைக்கு
இலக்கிய கிளைமாக்ஸ் வைப்பதற்காக கதைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் பிரபு சாலமன் என்று திரைக்கதையில் மேலும் சில பிரச்சினைகள்.
மற்றபடி எவ்வளவு இம்சை பண்ணினாலும், நம்மாட்களிடம் பர்ஃபக்ஷனை எதிர்பார்ப்பதில் நான் ஒரு மனம் தளராத வேதாளம் என்பதால், என் எதிர்பார்ப்பை ஓரங்கட்டிவிட்டு நீங்கள் படத்தைப் பார்க்கலாம். எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படம் பார்க்கவேண்டிய படமாகவே இருக்கிறது.
விக்ரம் பிரபுவுக்கு அவ்வளவு எளிதில் யாருக்கும் சிக்காத கம்பீரமான வாய்ப்பு முதல் படத்திலேயே. அவரால் முடிந்த அளவுக்கு செய்திருக்கிறார் எனலாம். இன்னும் பெட்டராக எதிர்பார்க்கிறோம் விக்ரம். இன்னொரு சின்னக் குறை. இதற்கு முன்பு எந்த தமிழ்ப் படத்துக்கும் வாய்க்காத ஒரு அருமையான காட்சி ஒன்று இதில்க.. யானைப்போர்! அதுவும் படத்தில் அதுவரை ஏற்படுத்தப்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கும், அதன் பின் வரும் கிளைமாக்ஸுக்கும் நியாயம் செய்யவேண்டிய காட்சி. அதகளம் பண்ணியிருக்கவேண்டிய காட்சி. ஏதோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்ற அளவே செய்திருக்கிறார்கள். சிஜி... இருந்தாலும் இந்திய சினிமாக்கள் பலவும் ஏற்கனவே நிரூபித்துவிட்ட விஷயம்தான். லட்டு மாதிரி சீன், பாருங்கடா எங்க ஒர்க்கைனு தலை நிமித்திக்க ஒரு வாய்ப்பு, செலவு பார்க்காமல், நேரம் பார்க்காமல் பொறுமையாக செய்திருக்கலாம்.. 'லைஃப் ஆஃப் பை' ரிச்சர்ட் பார்க்கரின் உறுமலுக்கு முன்னால் மாணிக்கம் பிளிறியிருக்க வேண்டாமா? சரி, விடுங்க.. நம்ப மாணிக்கத்துக்கு பட்ஜெட் பிரச்சினை!
.
Bonus:
நீதானே என் பொன் வசந்தம்
ஒரே லவ்வுதான், ஒரே முட்டை போண்டாதான். எத்தனை தடவைன்னாலும் பார்க்கலாம், தின்னலாம். ஆனா, அதில பிரச்சினை இல்லாம இருக்கணும்.
இவ்வளவு நாளான பிறகும், அவ்வளவு லைவ்லியான விண்ணைத்தாண்டி வருவாயாவின் பல காட்சிகள் இன்னும் மனதை வருடுகின்றன. காரணம் உணர்வுகள் காட்சியான விதம். தமிழ்ல சொன்னா கெமிஸ்ட்ரி. அது இருந்துச்சு அதில். வெஜ் போண்டா நல்லால்லைனா கூட அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு உள்ள தள்ளிடலாம். முட்டைன்னா நாறிப்போகும்! சமந்தாவே அதைப் பண்ணித் தந்து, இளையராஜா சட்னி வைச்சாக்கூட அது ஆவுறதில்ல.. அவ்வளவுதான் சொல்லுவேன், ஆமா!
.
ஒரு பாரம்பரியமான மலைக்கிராமம். அவர்களின் அறுவடைக் காலத்தை சிதைத்து, உயிர்களை கொல்லும் கொம்பன் எனும் ஒற்றை மலை யானை. அரசு உதவாத நிலையில் அந்த பருவத்தை தனியார் கும்கி யானையின் உதவியுடன் அறுவடை செய்ய திட்டமிடுகிறார்கள் அவர்கள். வரவேண்டிய கும்கியின் வரவு தாமதப்பட தற்காலிகமாக கும்கி யானை என்ற பெயரில் கோயில் விழாக்களில் பங்கேற்கும், சாதாரண ஒரு எருமையின் கனைப்புக்கும் கூட பயப்படும் ஒரு சாதுவான யானை கொண்டுவரப்படுகிறது. அதன் பாகன் பொம்மன் நட்புக்காக இப்படி தன் யானை மாணிக்கத்தோடு அங்கு வருகிறான். உண்மையான கும்கி வரும் சூழல் வந்தபின்பும் தானே அங்கு இருப்பேன் என்று அடம்பிடித்து தொடர்கிறான். காரணம் அங்கு அவனுக்கு ஏற்பட்ட காதல்.
கட்டுப்பாடுகளை மீறி அவன் காதல் வென்றதா, கொம்பனை மாணிக்கம் விரட்டியதா என்பதையெல்லாம் நீங்கள் வெள்ளித்திரையிலே கண்டுகொள்ளவும். இப்பல்லாம் முழுசா கதை சொன்னா 'ஸ்பாய்லர்'னு சொல்லி அடிக்க வர்றாங்கப்பா..
இவ்வளவு விறுவிறுப்பான, புதிய கதைக்கு எவ்வளவு அழகான லொகேஷன், அற்புதமான ஒளிப்பதிவு, விஷுவல்ஸ் இன்ன பிற அட்டகாசமான விஷயங்கள் இருந்தும் 'படம் பிரமாதமா?' என்று கேட்டால் லேசாக நெளியத்தான் வேண்டியிருக்கிறது. பல காட்சிகள் மெதுவாக ஊர்வது போல உணர்வு. காரணம் மிக எளிதானது. மாணிக்கம்- பொம்மனுக்கிடையேயான உறவு, பொம்மன்- அவன் காதலிக்கிடையேயான உறவு, கிராமத்தின் பின்னணி போன்ற முக்கியமான விஷயங்களில் அழுத்தமே இல்லை.
போதும் போதாமைக்கு பொறுமையைச் சோதிக்கும் தம்பி ராமையா, கொம்பனின் பி.ஆர்.ஓ போலவே அவ்வப்போது வந்து செயல்படும் காட்டிலாகா அதிகாரி, மைனா போலவே ஒரு அழகான கமர்ஷியல் கதைக்கு
இலக்கிய கிளைமாக்ஸ் வைப்பதற்காக கதைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் பிரபு சாலமன் என்று திரைக்கதையில் மேலும் சில பிரச்சினைகள்.
மற்றபடி எவ்வளவு இம்சை பண்ணினாலும், நம்மாட்களிடம் பர்ஃபக்ஷனை எதிர்பார்ப்பதில் நான் ஒரு மனம் தளராத வேதாளம் என்பதால், என் எதிர்பார்ப்பை ஓரங்கட்டிவிட்டு நீங்கள் படத்தைப் பார்க்கலாம். எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படம் பார்க்கவேண்டிய படமாகவே இருக்கிறது.
விக்ரம் பிரபுவுக்கு அவ்வளவு எளிதில் யாருக்கும் சிக்காத கம்பீரமான வாய்ப்பு முதல் படத்திலேயே. அவரால் முடிந்த அளவுக்கு செய்திருக்கிறார் எனலாம். இன்னும் பெட்டராக எதிர்பார்க்கிறோம் விக்ரம். இன்னொரு சின்னக் குறை. இதற்கு முன்பு எந்த தமிழ்ப் படத்துக்கும் வாய்க்காத ஒரு அருமையான காட்சி ஒன்று இதில்க.. யானைப்போர்! அதுவும் படத்தில் அதுவரை ஏற்படுத்தப்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கும், அதன் பின் வரும் கிளைமாக்ஸுக்கும் நியாயம் செய்யவேண்டிய காட்சி. அதகளம் பண்ணியிருக்கவேண்டிய காட்சி. ஏதோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்ற அளவே செய்திருக்கிறார்கள். சிஜி... இருந்தாலும் இந்திய சினிமாக்கள் பலவும் ஏற்கனவே நிரூபித்துவிட்ட விஷயம்தான். லட்டு மாதிரி சீன், பாருங்கடா எங்க ஒர்க்கைனு தலை நிமித்திக்க ஒரு வாய்ப்பு, செலவு பார்க்காமல், நேரம் பார்க்காமல் பொறுமையாக செய்திருக்கலாம்.. 'லைஃப் ஆஃப் பை' ரிச்சர்ட் பார்க்கரின் உறுமலுக்கு முன்னால் மாணிக்கம் பிளிறியிருக்க வேண்டாமா? சரி, விடுங்க.. நம்ப மாணிக்கத்துக்கு பட்ஜெட் பிரச்சினை!
.
Bonus:
நீதானே என் பொன் வசந்தம்
ஒரே லவ்வுதான், ஒரே முட்டை போண்டாதான். எத்தனை தடவைன்னாலும் பார்க்கலாம், தின்னலாம். ஆனா, அதில பிரச்சினை இல்லாம இருக்கணும்.
இவ்வளவு நாளான பிறகும், அவ்வளவு லைவ்லியான விண்ணைத்தாண்டி வருவாயாவின் பல காட்சிகள் இன்னும் மனதை வருடுகின்றன. காரணம் உணர்வுகள் காட்சியான விதம். தமிழ்ல சொன்னா கெமிஸ்ட்ரி. அது இருந்துச்சு அதில். வெஜ் போண்டா நல்லால்லைனா கூட அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு உள்ள தள்ளிடலாம். முட்டைன்னா நாறிப்போகும்! சமந்தாவே அதைப் பண்ணித் தந்து, இளையராஜா சட்னி வைச்சாக்கூட அது ஆவுறதில்ல.. அவ்வளவுதான் சொல்லுவேன், ஆமா!
.